Monday, November 9, 2009

6000

என்ன அக்கறை? என்ன அக்கறை?? சட்ட ஒழுங்கு ப்ரச்னையில் இந்த அரசுக்கு? உடல் புல்லரிக்கிறதே?!
சட்டகல்லூரியில் மிருக வெறி கொண்டு ஒருவரையொருவர் (மாணவர்கள்) தாக்கிக்கொண்ட போது வேடிக்கை பார்த்தபோது எங்கையா போச்சு இந்த அதீத அக்கறை?
வெறும் இருநூறு பேர் கூட இல்லாத ஆர்பாட்டத்தை அடக்க ஆறாயிரம் பேரா? நடத்தித்தான் பார்க்கட்டுமே நிலம் என்ன அசையும் சொத்தா என்ன எடுத்துக்கொண்டு ஓடுவதற்கு?
யார் ஆகவும் இருக்கட்டுமே? 600 ஏக்கர் புறம்போக்கு நிலத்தை வைத்துக்கொண்டு ஒருவர் என்ன பண்ண முடியும்? இத்துணை (பே)ராசை உள்ள ஒருவரால் சமன் செய்து சீர் தூக்கி ஒரு பால் கோடாமல் எப்படி இருக்க முடியும்?
சட்டம் நீதி இவற்றின் பால் சாதாரண மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையல்லவா ஆட்டம் காணும்?.....

No comments:

Post a Comment